Published : 28 Nov 2015 09:57 AM
Last Updated : 28 Nov 2015 09:57 AM
கனமழைக்கு உயிரிழந்த 8 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
வடகிழக்கு பருவமழை கார ணமாக சென்னை அமைந்த கரை அண்ணாநகரைச் சேர்ந்த பட்டம்மாள், மேற்கு ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த லோகேஷ், காஞ்சிபுரம் மாவட் டம் தையூரைச் சேர்ந்த அரி கிருஷ்ணன், திருக்கழுக்குன் றத்தைச் சேர்ந்த சேகர், சேலம் அரசிராமணியைச் சேர்ந்த பெருமாள், வேலூர் மாவட்டம் பாலியைச் சேர்ந்த சிதம்பரம் ஆகியோர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் கிளாயைச் சேர்ந்த வினோத் என்பவரின் குழந்தை சஞ்சனா கால்வாயில் விழுந்த தில் நீரில் அடித்துச் செல்லப் பட்டு உயிரிழந்தாள். மேலும் காஞ்சிபுரம் நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் சுவர் இடிந்து விழுந்து இறந்தார்.
கனமழையின் காரணமாக உயிரிழந்த 8 பேர் குடும்பங் களுக்கும் பேரிடர் நிவாரண நிதி யில் இருந்து தலா ரூ.4 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT