Published : 10 Oct 2015 07:02 AM
Last Updated : 10 Oct 2015 07:02 AM

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக கேரளம், கர்நாடகம் மற்றும் கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது தவிர நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, திருவள்ளூரிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில், கிழக்கு மத்திய அரபிக் கடலில் மும்பை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கோவா, கொங்கண் பகுதிகள், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒருசில பகுதி களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப் படுகிறது. மேலும், 12-ம் தேதி தமிழகத் தின் பெரும்பாலான பகுதிகளிலும், 13-ம் தேதி ஒருசில பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x