புதுச்சேரியில் புதிதாக 35 பேருக்குத் தொற்று; உயிரிழப்பு இல்லை

புதுச்சேரியில் புதிதாக 35 பேருக்குத் தொற்று; உயிரிழப்பு இல்லை
Updated on
1 min read

புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், எங்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்துச் சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (ஜன.21) தெரிவித்திருப்பதாவது:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,710 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 10 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், மாஹேவில் 17 பேருக்கும் என மொத்தம் 35 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், இன்றைய தினம் உயிரிழப்பு எதுவுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 643 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 772 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 119 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 180 என மொத்தம் 299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 80 (97.57 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 46 ஆயிரத்து 187 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்து 2 ஆயிரத்து 913 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளன.’’

இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in