Published : 17 Jan 2021 03:15 AM
Last Updated : 17 Jan 2021 03:15 AM
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை பருத்திவீரன் புகழ் நடிகர் சரவணன் பார்த்தார். தன்னுடைய புதிய படத்தில் ஜல்லிக்கட்டுக் காட்சி வைப்பதற்காக இப்போட்டியைக் காண வந்ததாகத் தெரிவித்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க நடிகர்கள், இயக்குநர்கள், தமிழ் ஆய்வாளர்கள், வெளிநாட்டு தமிழ் சங்கப் பிரதி நிதிகள் வருவார்கள்.
இந்த ஆண்டு கரோனா காரணமாக இவர்கள் வரவில்லை. ஆனால் பருத்தி வீரன் புகழ் நடிகர் சரவணன் மட்டும் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் வந்து பார்த்தபோதுதான் இதன் சிறப்பு தெரிந்தது. தமிழ் கலாச்சாரம் போற்றும் இவ்விழா தொடர்ந்து நடக்க வேண்டும்.
தமிழ் கலாச்சாரம், பண்பாடு பிரதிபலிக்கும் சில காட்சிகள் குறித்து நான் எடுக்கும் `மதுர' என்ற புதிய திரைப்படத்தில் இடம்பெறச் செய்யத் திட்டமிட்டுள்ளேன். அதற்காக நேரில் பார்க்க வந்தேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT