Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரி வித்தார்.
கேரளா மாநிலம் கோட்டயம், ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங் களில் ஏராளமான கோழி, வாத்து பண்ணைகள் உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் நோய்களின் தாக்கத்தால் பல கோழிகள், வாத்துகள் உயிரிழந்தன. ஆய்வுசெய்ததில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன.
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கேரளாவை தொடர்ந்து ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. நோய்களின் தாக்கத்தால் அங்கும் பல பறவைகள் உயிரிழந்து வருகின்றன. பறவைக் காய்ச்சலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், பறவைக் காய்ச்சல் குறித்து சென்னையில் தமிழக சுகாதாரத் துறை செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கூறியதாவது:
பறவைக் காய்ச்சல் நேரடியாக கால்நடைகளை பாதிக்கும் என்றாலும், மனிதர்களுக்கும் வரலாம்.தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வராமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரிஆகிய 6 மாவட்டங்களில் கால்நடை துறை சார்பில் 26 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு, மாநிலத்துக்குள் வந்து செல்லும் கால்நடைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து சுகாதாரப் பணியாளர்களும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
எல்லைகளில் கண்காணிப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், கோழிக்கறி கழிவுகளை தமிழக பகுதிகளில் அடிக்கடி கொட்டிச் செல்வார்கள். இதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். முறையான அனுமதி இல்லாத வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT