Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள், அவரவர் சின்னங்களிலேயே போட்டியிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும். தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி ரூ.2,500 ரொக்கம் வழங்குவது பாராட்டுக்குரியது. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பானதாக உள்ளது.
அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் என்பன குறித்து தகுந்த நேரத்தில் சுமுகமான முறையில் கலந்துபேசி முடிவுசெய்து அறிவிக்கப்படும். அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு, அவரவர் சின்னங்களில் போட்டியிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. திமுகவில்தான் அந்தச் சிக்கல் உள்ளது. மு.க.அழகிரி மரியாதைக்குரியவர். மதுரை பகுதி மேம்பாட்டுக்காக பாடுபட்டவர். அவர் திடீரென கூட்டம் நடத்துவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT