Published : 04 Jan 2021 03:21 AM
Last Updated : 04 Jan 2021 03:21 AM

வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுவதில் எந்த தவறும் இல்லை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தகவல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் எந்த தவறும் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

திமுக சார்பில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் கிராம சபைக்கூட்டங்கள் பல்வேறு கிராமங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. வரும் 10-ம் தேதி வரை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத் துக்கு உட்பட்ட டி.கே.புரம் ஊராட் சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேபோல, தமிழக அரசும்வேளாண் சட்டங்களை எதிர்த்துதீர்மானம் கொண்டு வர வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இனிமேலாவது வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மு.க.அழகிரி தனி கட்சி தொடங்குவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் தனிச்சின்னம்கேட்பதில் எந்த தவறும் இல்லை.ஏனென்றால் அனைத்து கட்சிகளுக் கும் தனி கொள்கை இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x