Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா? - கிரண்பேடிக்கு நாராயணசாமி காட்டமான பதில்: அன்றாட நிகழ்வுகளில் தலையிடுவதாக வருத்தம்

புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளில் ஆயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள். விடுதிகளில் அனைத்து அறைகளும் முன்பதிவுசெய்யப்பட்டு விடும். நடப்பாண்டில், கரோனா பரவல், மதுபானங்கள் விலை உயர்வு, கேளிக்கை நிகழ்ச்சிகள் ரத்து உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்யவில்லை.

இதற்கிடையே, “புதுவை கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லை” என்று ஆளுநர் கிரண்பேடி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆட்சியர் பூர்வாகார்க் அதற்கான உத்தரவையும் பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரி கடற்கரை மற்றும் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாடலாம். தடை யில்லை” என்று நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இதற்கு பதிலாக ஆளுநர் கிரண்பேடி நேற்று வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். விமானத்தில் அவருடன் பக்கத்து இருக்கையில் பயணித்த புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத் தப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டு கடற்கரை சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் விழாக்களை கொண்டாடவும், கடற்கரை சாலையில் பொதுமக்கள் கூடவும் தடை இல்லை என அரசு தெரிவித்துள்ளது. தற்போது, புதுவையில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தால் சுற்றுலா பயணிகள், வெளிமாநிலத்தினர் மூலம் தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமிக்கு கிரண்பேடி கடிதம் அனுப்பினார். அதில், "மக்கள் நலனை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை தமிழகத்தைப்போல் ரத்து செய்யவேண்டும்" என்று குறிப்பிட்டி ருந்தார்.

அதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி கிரண்பேடிக்கு நேற்று மாலை அனுப்பிய பதிலில், "மக்கள் பாதுகாப்பில் புதுச்சேரி அரசு கவனம் செலுத்துகிறது. புதுச்சேரியை போன்று சுற்றுலாத் தலமான கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை யில்லை. கரோனாவிலிருந்து 97.4சதவீத மக்கள் குணமடைந்துள் ளனர். கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாடும் போது மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்கிறார்களா என்பதை போலீஸார் கண்காணிப்பார்கள்.

அன்றாட நிகழ்வுகளில் தலையிடுவதே உங்கள் வழக்கமாக உள்ளது. தற்போதைய பொருளாதார சூழலில் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடையில்லை.

தமிழகத்தைச் சுட்டிக்காட்டி தடை கோருகிறீர்கள். தமிழகத்தில் பொங்கலுக்கு ரூ.2,500 பரிசு அறிவித்தது போல் புதுச்சேரியில் தர ஒப்புதல் தர வேண்டும்.

கரோனா காலத்தில் மக்கள் வசிப்பிடம் சென்று அவர்கள் பிரச்சினை அறிந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பணியாற்றினோம். நீங்களோ கரோனா தொடங்கியதில் இருந்து இன்று வரை 9 மாதங்களாக ராஜ் நிவாஸை விட்டு வெளியே வரவில்லை.

முழுக்க பாதுகாக்கப்பட்ட வாழ்வையே வாழ்கிறீர்கள். ஆனால், குற்றம் சாட்டுவதை மட்டுமே செய்கிறீர்கள்! சமூகத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையான நிலவரமே தெரியவில்லை.

அதே நேரத்தில் நிர்வாகத்தில் நாள்தோறும் தலையிட்டு, அதிகாரி களுக்கு நேரடி உத்தரவிடுகிறீர்கள். இது சட்ட விரோதம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் நாராயணசாமி புத்தாண்டை கொண்டாட வாய் மொழியாக உத்தர விட்டாலும், எழுத்துப்பூர்வ உத்தரவு ஏதும் நேற்று இரவு வரை வெளியாகவில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x