Published : 19 Oct 2015 09:53 AM
Last Updated : 19 Oct 2015 09:53 AM

எஞ்சியுள்ள மெட்ரோ பணிகளை மேற்கொள்ள இன்று டெண்டர் திறப்பு

சைதாப்பேட்டையில் இருந்து மே தின பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள இன்று டெண்டர் திறக்கப்படுகிறது. இதில் 8-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

சென்னையில் 2 வழித்தடங் களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில் மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான பணிகளை மேற்கொண்ட ‘கேமின்’ நிறுவனம் திடீரென வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, கேமின் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் போதிய ஆவணங்களை அளிக்காத நிலையில், எஞ்சியுள்ள மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள புதிய நிறுவனத்தை தேர்வு செய்துகொள்ளலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, எஞ்சியுள்ள மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள புதிய டெண்டரை கடந்த 9-ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், நிறுவனங்கள் கால அவகாசம் கேட்டதால், இன்று டெண்டர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சைதாப்பேட்டை மே தினப் பூங்கா இடையே எஞ்சியுள்ள மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டது. புதிய டெண்டருக்கான விதிமுறைகள் குறித்து 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆலோசனைகளை பெற்று சென்றுள்ளன. இந்நிலையில் இன்று (19-ம் தேதி) டெண்டர் திறக்கப்படுகிறது. இதில் 8-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த 30 நாட்களில் இருந்து 40 நாட்களுக்குள் புதிய நிறுவனத்தை தேர்வு செய்து மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்வோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x