Published : 12 Oct 2015 09:26 PM
Last Updated : 12 Oct 2015 09:26 PM
தீபாவளி ஷாப்பிங் செல்லும் வகையில் பொதுமக்கள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், பிராட்வே உள்ளிட்ட முக்கிய வணிக இடங்களுக்கு 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அடுத்த மாதம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி, தங்க நகை, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை வாங்க சென்னையின் முக்கிய பகுதிகளான தியாகராய நகர், புரசைவாக்கம், பிராட்வே, தாம்பரம் உள்ளிட்ட முக்கியமான வணிக இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள்.
மக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளின் சேவை விரைவில் தொடங்கவுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT