Published : 20 Dec 2020 08:23 PM
Last Updated : 20 Dec 2020 08:23 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 1,114 பேருக்குக் கரோனா; சென்னையில் 325 பேர் பாதிப்பு: 1,198 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,114 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 891 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 325 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (டிச. 20) வெளியிட்டுள்ள விவரம்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 1,114 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 661 பேர், பெண்கள் 453 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 891 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 87 ஆயிரத்து 551 பேர். பெண்கள் 3 லட்சத்து 19 ஆயிரத்து 306 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 34 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 28 ஆயிரத்து 580 பேர். 13-60 வயதுக்குட்பட்டோர் 6 லட்சத்து 72 ஆயிரத்து 719 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 1 லட்சத்து 5 ஆயிரத்து 592 பேர் .

இன்று புதிதாக 72 ஆயிரத்து 967 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 34 லட்சத்து 60 ஆயிரத்து 16.

இன்று புதிதாக 72 ஆயிரத்து 568 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 8 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 7 பேர் என 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்த அனைவரும் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் ஆவர்.

தமிழகம் முழுவதும் தற்போது வரை 9,593 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 1,198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 85 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பாக 67, தனியார் சார்பாக 168 என, 235 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 325 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 318 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,954 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை சென்னையில் 3,018 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x