Last Updated : 16 Dec, 2020 01:26 PM

 

Published : 16 Dec 2020 01:26 PM
Last Updated : 16 Dec 2020 01:26 PM

புதுச்சேரியில் புதிதாக 32 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் இன்று புதிதாக 32 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 16) தெரிவித்திருப்பதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் 3,477 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 16 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேவில் 13 பேருக்கும் என மொத்தம் 32 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப் படம்

மேலும், புதுச்சேரி உழவர்கரையைச் சேர்ந்த 57 வயது நபர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 622 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.

இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் 37 ஆயிரத்து 582 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் தற்போது மருத்துவமனைகளில் 201 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 98 பேரும் என 299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 28 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 661 (97.55 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரத்து 944 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 50 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x