Published : 06 Mar 2014 12:14 PM
Last Updated : 06 Mar 2014 12:14 PM
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஆலந்தூர் நகரக் கழகச் செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிமுக செய்திக் குறிப்பில்: "அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட ஆலந்தூர் நகரக் கழகச் செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுத்த நிறுத்தப்படுகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கடந்த டிசம்பர் 10-ம் தேதி ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆலந்தூர் தொகுதிக்கு ஏப்ரல் 24-ல் வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் (நேற்று) புதன் கிழமை அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT