Published : 21 Oct 2015 11:15 AM
Last Updated : 21 Oct 2015 11:15 AM

பாமக வரைவுத் தேர்தல் அறிக்கை பொதுக்கூட்டங்கள்: சென்னையில் 150 இடங்களில் நடந்தன

பாமக வரைவுத் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்கள் சென்னையில் 150 இடங்களில் நடைபெற்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் கான பாமகவின் வரைவுத் தேர்தல் அறிக்கை கடந்த மாதம் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங் கள் குறித்து பல்வேறு தரப்பினரை யும் சந்தித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விவாதிக்க உள்ளனர்.

அவர்கள் தெரிவிக்கும் கருத்துக் களையும் சேர்த்து பாமகவின் நிறைவுத் தேர்தல் அறிக்கை ஜனவரி மாதம் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக வரைவுத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களையும் மக்களிடம் விளக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பாமக வரை வுத் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

முதல் கட்டமாக சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட தி.நகர், வடபழனி உள்ளிட்ட 150 இடங்களில் பாமக வரைவுத் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. பாமக தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட கட்சியின் முன்னணித் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x