Last Updated : 12 Dec, 2020 11:55 AM

 

Published : 12 Dec 2020 11:55 AM
Last Updated : 12 Dec 2020 11:55 AM

புதுச்சேரியில் புதிதாக 38 பேருக்குக் கரோனா தொற்று: உயிரிழப்பு இல்லை

புதுச்சேரியில் இன்று புதிதாக 38 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், உயிரிழப்பு இல்லை. இதுவரை 3.90 லட்சம் பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 12) தெரிவித்திருப்பதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் 1,809 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 17 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், மாஹேவில் 15 பேருக்கும் என மொத்தம் 38 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 619 ஆகவும், இறப்பு விகிதம் 1.65 சதவீதமாகவும் இருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 444 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 209 பேரும், வீட்டுத் தனிமையில் 137 பேரும் என மொத்தம் 346 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 59 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 479 (97.42 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4 லட்சத்து 31 ஆயிரத்து 982 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 3 லட்சத்து 90 ஆயிரத்து 299 பேரின் பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x