Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM
இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் காரில் 20,822 கி.மீ. ஆன்மிக சுற்றுப் பயணம் செய்து 501 கோயில்களைத் தரிசித்துவிட்டு வந்த காரைக்குடி சகோதரர்களின் நீண்ட பயணம், 8 சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.
காரைக்குடி அருகே கே.வேலங்குடியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டித்துரை (30), கார்த்திகேயன் (27). மென் பொருள் பொறியாளர்களான இருவரும், கடந்த ஆண்டு நவ.7-ல் கே.வேலங்குடியில் இருந்து காரில் ஆன்மிகப் பய ணத்தைத் தொடங்கினர்.
அவர்கள் 49 நாட்களில் 20,822 கி.மீ. காரில் பயணித்து 20 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் மற்றும் நேபாளத்தில் 501 கோயில்களைத் தரிசித்தனர். மேலும் தங்களது பயணத்தை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்நிலையில், அவர்களது சாதனை ஏசியன் புக் ஆப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, வேல்ட் ரிக்கார்ட்ஸ் ஆப் இந்தியா, வஜ்ரா வேல்ட் ரெக்கார்டு, அஸ்ஸட் வேல்ட் ரெக்கார்டு, கலாம்ஸ் வேல்ட் ரெக்கார்டு, யுனிவர்சல் அச்சிவ் புக் ஆப் ரெக்கார்டு, பியூச்சர் கலாம் ரெக்கார்டு ஆகிய 8 புத்தகங்களில் பதிவாகியுள்ளன. மேலும் அவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாண்டித்துரை, கார்த்திகேயன் ஆகியோர் கூறு கையில்: ஆன்மிகச் சுற்றுப் பய ணத்திலும் இளைஞர்களுக்கு சந்தோஷம் உண்டு என்பதைக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் முயற்சி எடுத்தோம். ஆனால், அதிலும் எங்களுக்கு 8 விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT