Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

ராயபுரத்தில் தனியார் குடோனில் தீ விபத்து

ராயபுரத்தில் தனியார் குடோனில்திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

சென்னை ராயபுரம், லோட்டஸ் ராமசாமி தெருவில் தனியாருக்குச் சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தோலால் செய்யப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த குடோனில் நேற்று மதியம்திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல்அறிந்து ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, துறைமுகம், எஸ்பிளனேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து 9 தீயணைப்பு வாகனங்கள், 5 தண்ணீர் லாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள் உள்ளே இருந்ததால், கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் கண்ணா தலைமையில், 50 தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது விபத்துக்கு வேறுஏதேனும் காரணமா? என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். திடீர் தீ விபத்தால், ராயபுரம் பகுதியே சிறிது நேரம்புகை மண்டலமாக காட்சியளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x