Published : 04 Oct 2015 01:10 PM
Last Updated : 04 Oct 2015 01:10 PM
நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப் பட்டியைச் சேர்ந்த தமிழறிஞர் முத்துசாமிக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை யிலிருந்து ரூ. 5 லட்சம் பரிசும், மாதம் ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப் பட்டியைச் சேர்ந்த திரைப்பட பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே.முத்துசாமி (96) தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகள் பணி யாற்றி பல முன்னோடி சாதனை களைப் படைத்தவர்.
அவரது திரைப்பட பாடல்கள் காலத்தால் அழியாதவை. ‘புரட்சித் தலைவியின் புரட்சிக் காப்பியம்’, ‘புரட்சித் தலைவி அந்தாதி’ ஆகிய நூல்களை எழுதியுள் ளார்.
96 வயதிலும் தொடரும் அவரது ஆர்வத்தை பாராட்டி புரட்சித் தலை வர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை யிலிருந்து ரூ. 5 லட்சம் பரிசும், மாதம் ரூ. 5 ஆயிரமும் வழங்க முதல் வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT