Published : 04 Oct 2015 10:14 AM
Last Updated : 04 Oct 2015 10:14 AM

கோயம்பேடு மார்க்கெட்டில் 600 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மார்க்கெட் நிர்வாகக் குழு அதிகாரிகள் நடவடிக்கை

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த 600 ஆக்கிரமிப்பு கடைகள் நேற்று அகற்றப்பட்டன.

கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, காய்கறி, பழக் கடைகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடை கள் இயங்கி வருகின்றன. இங்கு ஆக்கிரமிப்பு கடைகளும் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இவை மார்க்கெட்டுக்குள் பொதுமக்கள் நுழையும் பகுதி, நடைபாதை, லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்குமிடம் ஆகிய பகுதிகளில் நடத்தப்படுகின்றன. இதனால் அங்கு வரும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவ தாக மார்க்கெட் நிர்வாகக் குழு முதன்மை நிர் வாக அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வரும் 21-ம் தேதி ஆயுதபூஜை வர இருப்பதையொட்டி, கோயம் பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை நடத்தப்பட உள்ளது. அப்போது மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. அந்நேரத்தில் ஆக்கிரமிப்பு கடை களால் பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுவதை தடுக்கும் விதமாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மார்க்கெட் நிர்வாகக் குழு முதன்மை நிர்வாக அலுவலர் உத் தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று சுமார் 600 கடைகளை மார்க்கெட் நிர்வாகக் குழு அதிகாரிகள் அகற்றினர்.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணி ஒரு வாரம் நடைபெறும். ஆக்கிரமிப்பு கடைக்காரர் களிடமிருந்து பறி முதல் செய்யப் பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்பட்டன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x