Published : 04 Sep 2015 09:19 AM
Last Updated : 04 Sep 2015 09:19 AM
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை ஆகிய மலைப் பிரதேசங்களில் கேபிள் கார் அமைப்பது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் சி.கிருஷ்ணன் (ஓமலூர்) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர், ‘‘தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை ஆகிய இடங்களில் கம்பிவழி ஊர்தி (கேபிள் கார்) அமைப்பது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT