Published : 30 Sep 2015 08:07 AM
Last Updated : 30 Sep 2015 08:07 AM
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறி ஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர் களும் கடந்த 14-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டது தொடர்பாக மாநில சட்டக் கல்வி இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ் குமாருக்கு மத்திய அரசு வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் புகார் அனுப்பினார். அதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வழக்கறிஞருக்கு சட்டக் கல்வி இயக்குநர் பதில் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் நடந்த போராட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றது குறித்து விரிவாக விசாரணை நடத்தப் பட்டது. போராட்டத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. மதுரை அரசு சட்டக் கல்லூரியின் 6 மாணவர்கள் கலந்துகொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது. அந்த 6 பேரும் அடையாளம் காணப் பட்டு, சட்டக் கல்வி இயக்கக உத்தர வின்படி அவர்கள் அனைவரும் செப்டம்பர் 25-ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க மதுரை அரசு சட்டக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அளிக்கும் அறிக்கை அடிப்படை யில், அந்த மாணவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT