Published : 11 Oct 2020 07:54 AM
Last Updated : 11 Oct 2020 07:54 AM
ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டு கைதானவரின் அறையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அகமது அப்துல் காதர்(30). சென்னையில் தனியார் வங்கியில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். பெங்களூருவை சேர்ந்தவர் நசீர். அரிசி மண்டி வைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுவதை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சென்னையில் இருந்து பெங்களூரு சென்று தங்கியிருந்த அகமது அப்துல் காதர் மற்றும் நசீரை என்ஐஏ அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் ‘ஹிஷ்ப் அட் டெக்ரிர்’என்ற அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பதும், இந்த அமைப்பின் மூலம் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இருவரும், இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ். அமைப்பில் சேர்க்க முயன்றதும் தெரியவந்துள்ளது.
மேலும், சிரியாவுக்கு செல்வதற்கு நிதி திரட்டியும் வந்துள்ளனர். இந்த நிலையில்தான், அகமதுஅப்துல் காதர், நசீர் ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள்கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப், பென்டிரைவ் உட்பட ஏராளமான மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில், தமிழகத்தை சேர்ந்த பலருடன் இருவரும் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், அகமது அப்துல் காதர்சென்னையில் தங்கியிருந்த அறையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைநடத்தியுள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT