Published : 02 Sep 2015 08:34 AM
Last Updated : 02 Sep 2015 08:34 AM

என்எல்சியில் புதிய மின்துறை இயக்குநர் பொறுப்பேற்பு

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் மின்துறை இயக்குநராக பணி யாற்றிய ராஜகோபால் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதை யடுத்து தேசிய அனல் மின் நிறு வனக் குழு (என்டிபிசி) பொது மேலாளராக பணியாற்றி வந்த தங்கபாண்டியன் என்எல்சி நிறுவ னத்தின் புதிய மின்துறை இயக்கு நராக பொறுப்பேற்றார். தென்காசி அருகிலுள்ள ஆவுடையானூரைச் சேர்ந்த தங்கபாண்டியன், தனது 34 ஆண்டுகாலப் பணியில் புதிய மின் நிலையங்களை நிர்மாணித்தல், உற்பத்திப் பணி, பராமரிப்பு போன்ற துறைகளில் அனுபவம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x