Last Updated : 02 Oct, 2020 05:59 PM

 

Published : 02 Oct 2020 05:59 PM
Last Updated : 02 Oct 2020 05:59 PM

புதுச்சேரியில் புதிதாக 514 பேருக்குக் கரோனா; மேலும் 7 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று புதிதாக 514 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் இன்று (அக் 2) கூறும்போது, ''புதுச்சேரியில் 4,653 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 435, காரைக்காலில் 57, ஏனாமில் 13, மாஹேவில் 9 என மொத்தம் 514 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பெண் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 532 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.86 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 28 ஆயிரத்து 534 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,637 பேர், காரைக்காலில் 495 பேர், ஏனாமில் 75 பேர், மாஹேவில் 30 பேர் என 3,237 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் 1,498 பேர், காரைக்காலில் 155 பேர், ஏனாமில் 106 பேர், மாஹேவில் 58 பேர் என 1,817 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,054 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 311 பேர், காரைக்காலில் 94 பேர், ஏனாமில் 21 பேர், மாஹேவில் 17 பேர் என மொத்தம் 443 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 948 பேர் (80.42 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 94 ஆயிரத்து 718 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 652 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x