Published : 23 Sep 2020 07:30 AM
Last Updated : 23 Sep 2020 07:30 AM

செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் ‘அம்மா’ நகரும் ரேஷன் கடை சேவை

சென்னை புறநகர் பகுதியில் நடமாடும் கடை மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடை சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக ‘அம்மா’ நகரும் நியாயவிலை கடை7 வாகனங்களை, தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மேடவாக்கம் மற்றும் நன்மங்கலம் பகுதியில் நடமாடும் கடை மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. இந்தக் கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் ஒருவர் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 70 நடமாடும் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள இவை, விரைவில் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும். நடமாடும் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுவது குறித்து அந்தந்த ரேஷன் கடைகளில் அறிவிப்பு செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x