Published : 26 Sep 2015 08:49 AM
Last Updated : 26 Sep 2015 08:49 AM

தி.மலை கிரிவலப் பாதையை சீரமைக்க ரூ.65 கோடி: நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.1,855 கோடியில் திட்டங்கள்

நடப்பாண்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1,855 கோடியே 36 லட்சம் மதிப்புள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

கடந்த 4 ஆண்டுகளில் நெடுஞ் சாலை, சிறு துறைமுகங்கள் துறை மூலம் ரூ.18,056 கோடியில் திட் டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.10,490 கோடியிலான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக முதல் கட்டமாக 7 முதல் 10 மீட்டர் அகலமுள்ள நடைபாதை, வடிகால் வசதி, ஓய்வு அறைகள் ஆகிய வசதிகள் ரூ.65 கோடியில் ஏற்படுத்தப்படும்.

விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் ரூ.250 கோடி யில் நெடுஞ்சாலைத் துறை பணிகள் நடந்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் 2-வது கட்டமாக ரூ.150 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நடப்பாண்டில் சேலம் மாவட்டத் தில் 5, வேலூர் மாவட்டத்தில் 2, கோவை, கடலூர், மதுரை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று என 12 ரயில்வே மேம்பாலங்கள், கீழ் பாலங்கள் ரூ.665.36 கோடியில் அமைக்கப்படும்.

திருவள்ளூர் கோட்டத்தில் 485 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள், 278 கி.மீ. மாவட்ட முக்கிய சாலை கள் ரூ.680 கோடியில் செயல் பாட்டு அடிப்படையிலான பரா மரிப்பு திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

சிங்கப்பெருமாள்கோவில் பெரும்புதூர் மாநில நெடுஞ் சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் முதல் ஒரகடம் வரை ரூ.120 கோடியில் 6 வழிச் சாலை யாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வண்டலூர் முதல் ஒரகடம் வரை 20 கி.மீ. நீளச் சாலை ரூ.200 கோடியில் 4 வழி மற்றும் 6 வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்.

வண்டலூர் மாம்பாக்கம் கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் ரூ.60 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். சென்னை கொளத்தூர் இரட்டை ஏரி அருகில் பெரம்பூர் செங்குன்றம் சாலை சந் திப்பில் ரூ.52.72 கோடியில் இடது புற சாலையில் மேம்பாலப்பணி நடந்து வருகிறது. 2-வது கட்டமாக நடப்பாண்டில் வலது புறச்சாலை யில் ரூ.35 கோடியில் மேம்பாலப் பணி மேற்கொள்ளப்படும்.

நெடுஞ்சாலைத் துறை சார்பில் மொத்தம் ரூ.1,855 கோடியே 36 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x