Published : 14 Sep 2020 07:39 AM
Last Updated : 14 Sep 2020 07:39 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ தங்கவேல் கரோனாவால் காலமானார்

கே.தங்கவேல்

திருப்பூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.தங்கவேல் (69) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

தங்கவேல் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, இளம் வயதிலேயே பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, சிஐடியூ-வில் இணைந்தார். 1974-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக 2011 முதல் 2016 வரை இருந்தார்.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 29-ம் தேதி கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது சடலம் திருப்பூருக்கு கொண்டுவரப்பட்டு, ஆத்துப்பாளையம் சாலை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x