Published : 13 Sep 2020 07:34 AM
Last Updated : 13 Sep 2020 07:34 AM
தமிழகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் பங்க் இரவு 8 மணிவரை இயங்குகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் ஊரடங்கு தளர்வில் பங்க்குகளுக்கு நேரத் தளர்வு அறிவிக்கப்பட்டது.
இதைக் கருத்தில் கொண்டும், பங்க்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டும் இரவு 10 மணிவரை இயங்க அனுமதிக்குமாறு அரசுக்கு கூட்டுறவுத் துறை கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்று, செப்.30-ம் தேதிவரை காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை பெட்ரோல், டீசல் பங்க் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பான அரசாணையை தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT