Published : 07 Sep 2020 08:17 AM
Last Updated : 07 Sep 2020 08:17 AM

தமிழகத்தில் வழக்கம்போல் ஓடும் வாகனங்கள் சாலை விதிகளை மீறி இயக்குவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

தமிழகத்தில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கிஉள்ளது. இதேபோல், மாநிலங்களுக்கு செல்ல இ.பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மக்கள் வெளியூர் பயணம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

இதனால் சென்னை,கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 5 மாதங்களாக காலியாக இருந்த சாலைகளில் வாகனங்களை ஓட்டியதைபோல் தற்போதும் சிலர் போக்கு
வரத்து விதிகளை மீறி இயக்குவதால் சாலை விபத்து ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவில் ஆக் ஷன் குரூப் (சிஏஜி) அமைப்பின் மூத்த ஆய்வாளர் சுமணா கூறும்போது, ‘‘ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில்மீண்டும் வாகனங்கள் வழக்கம்போல் ஓடத் தொடங்கியுள்ளன.

சென்னையில் ஊரடங்கு காலத்தில் சாலைகள் வெறிச்சோடி இருந்தபோது, வாகனங்களை ஓட்டியதைப் போல் தற்போதும் வேகமாக சிலர் ஓட்டுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்களாக ஓடாத வாகனங்களை கட்டாயம் சோதனை செய்து, தொழில்நுட்பக் குறைபாடு இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும்’’என்றார்.

புத்துணர்வு பயிற்சி

இதுதொடர்பாக தொமுசபொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மீண்டும் வழக்கம்போல் வாகனங்கள் ஓடத் தொடங்கியுள்ளன. கரோனா பாதிப்பால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஓட்டுநர்கள் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
எனவே, நீண்ட தூரம் செல்லும் ஓட்டுநர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். நீண்ட தூரப் பேருந்துகளுக்கு 2 ஓட்டுநர்களிடம் பணியை பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ’’என்றார்.

கூடுதல் பேருந்துகள், ரயில்கள்

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘சமூக இடைவெளியைப் பின்பற்ற கூடுதல் ரயில், பேருந்துகளை இயக்க வேண்டும். பயணிகள் கூட்டமாக செல்வதை தடுப்பது, கரோனா பரிசோதனைக்குப் பிறகு பயணிகளை அனுமதிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடரவேண்டும். சென்று வரும் ஒவ்வொரு முறையும் பேருந்துக்கு கட்டாயம் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்மிகவும் குறைவான அளவுக்கேபயணிகளை அழைத்து செல்வதால் கட்டாயம் போக்குவரத்துத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படும்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x