Published : 08 Sep 2015 08:40 AM
Last Updated : 08 Sep 2015 08:40 AM

இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசு ஏற்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசு ஏற்க உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரைச் சேர்ந்த கே.பிரவீண் குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப்ஸ் கியூஸ், கடந்த 25.11.2014-ம் தேதி நடைபெற்ற போட்டியின்போது தலையில் கிரிக்கெட் பந்து பட்டதில் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்தார். கிரிக்கெட் போட்டிகளில் 1870-ம் ஆண்டில் இருந்து, இதுவரை 4 பேர் இறந்துள்ளனர். வீரர்கள் ஹெல்மெட் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்துதான் விளையாடுகின்றனர். எவ்வளவு முன்னெச்சரிக்கையாக விளை யாடினாலும் வீரர்கள் இறக்கின்றனர். வீரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வரை இந்திய கிரிக்கெட் அணி போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட போட்டிகளையும் ரத்து செய்ய வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசு ஏற்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர். சுதாகர், வி.எம். வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனு, பொதுநலன் மனு அல்ல என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x