Published : 06 Sep 2015 10:52 AM
Last Updated : 06 Sep 2015 10:52 AM

தமிழக அரசு இடம் தந்தால் சென்னையில் வெங்கடாசலபதி கோயில்: திருப்பதி தேவஸ்தான தலைவர் தகவல்

தமிழக அரசு இடம் தந்தால் சென்னையிலும் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் எழுப்பப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

சென்னை தி.நகரில் உள்ள தேவஸ்தான அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்த கிருஷ்ணமூர்த்தி, நிருபர்களிடம் கூறிய தாவது:

திருப்பதியில் இருந்து தி.நகர் தேவஸ்தானத்துக்கு வாரந்தோறும் 7 ஆயிரத்து 500 லட்டுகள் அனுப்பப் படுகின்றன. அது போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, லட்டின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, வரும் காலங்களில் வாரம் 15 ஆயிரம் லட்டுகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் இருந்து அதிக பக்தர் கள் திருமலைக்கு வருகின்றனர். தமிழக அரசு இடமும் அனுமதியும் அளித்தால் சென்னையிலும் ஒரு திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பணி மந்தம்

கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் பணி மந்தமாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது. அது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, கோயில் கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x