Published : 02 Sep 2015 08:15 AM
Last Updated : 02 Sep 2015 08:15 AM

குடிநீர் வாரியம் ரூ.470 கோடி வருவாய் வசூல்

சென்னை குடிநீர் வாரியம் 2014-15-ம் நிதியாண்டில் ரூ.470 கோடி குடிநீர் வருவாய் வசூல் செய்துள்ளது.

குடிநீர் வாரிய நுகர்வோர் களிடமிருந்து குடிநீர் வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2014-15-ம் நிதியாண்டில் ரூ.470 கோடி வருவாய் வசூலிக்கப்பட் டுள்ளது. 2013-14-ம் நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட ரூ.394 கோடி வருவாயை விட இது ரூ.76 கோடி அதிகமாகும். அதிக வருவாய் ஈட்டுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சென்னைப் பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் பி.சந்தர மோகன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி கவுரவப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x