Published : 29 Aug 2020 06:55 AM
Last Updated : 29 Aug 2020 06:55 AM
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாளை நடக்கும் பிரதோஷ வழிபாட்டை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறும். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 5 மாதங்களாக யூ-டியூப் சேனல் மூலமாக நேரலையில் பிரதோஷ வழிபாட்டை பக்தர்கள் கண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாளை மாலை 4.30 மணிக்கு நந்தி அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வை http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற யூ-டியூப் சேனல் மூலமாக நேரலையில் ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT