Published : 28 Aug 2020 07:12 AM
Last Updated : 28 Aug 2020 07:12 AM

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை,விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x