Published : 20 Aug 2020 07:17 AM
Last Updated : 20 Aug 2020 07:17 AM
கும்பகோணம் அருகே காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 2 துப்பாக்கிகள் மாயமான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த விளந்தகண்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(35), மகாராஜபுரம் ராம்குமார் (40), முட்டக்குடி அரவிந்தன்(40) ஆகியோர் உரிய அனுமதியின்றி பயன்படுத்திய ஏர்கன் வகை துப்பாக்கிகள் 6, தோட்டாக்கள் 67 ஆகியவற்றை திருப்பனந்தாள் போலீஸார் மார்ச் 19-ம் தேதி பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட துப் பாக்கி, தோட்டாக்கள் காவல் நிலை யத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தன. இந்நிலையில், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல நேற்று போலீஸார் பார்த்தபோது, அங்கிருந்த 2 துப்பாக்கிகளை காணவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால், அந்தத் துப்பாக்கிகள் காணாமல் போகவில்லை எனவும், வேறு இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் திரு விடைமருதூர் டிஎஸ்பி அசோகன் தெரிவித்தார்.
அதேசமயம், அந்த துப்பாக்கிகள் காணாமல் போனது உண்மை தான் எனவும், இதுகுறித்து விசாரணை நடை பெற்று வருவதாகவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT