Published : 15 Aug 2020 06:56 AM
Last Updated : 15 Aug 2020 06:56 AM
ஆர்.ஏ.புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆர்.ஏ புரம், 1-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 25-க்கும் மேற்பட்டோர் கூடி, சட்ட விரோதமாகபணத்தை வைத்து சூதாட்டத்தில்ஈடுபட்டு வருவதாக பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீஸாருக்குரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மயிலாப்பூர்காவல் துணை ஆணையர்ஷசாங் சாய் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த முகப்பேர் மகேந்திரன் (51), முடிச்சூர்கோபி (46), திருவள்ளூர் ரவி(46), ஈக்காட்டுத் தாங்கல் ராம்குமார் (38), அரும்பாக்கம் வீரராகவன் (62) உள்ளிட்ட 29 பேரைகைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 55 ஆயிரம் மற்றும் 10 சீட்டுக் கட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. சென்னையில் இதேபோன்று சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT