Published : 02 Sep 2015 08:38 AM
Last Updated : 02 Sep 2015 08:38 AM
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மதகளிர்மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், தமிழ்நாடு விடுதலைப் படை இயக்கத் தலைவர் தமிழரசன். அவரது 28-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்தேச மக்கள் கட்சி சார்பாக தமிழரசனுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்த உள்ளதாக ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
இந்த நினைவஞ்சலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எனினும், நேற்று அவரது நினைவு தினம் என்பதால் தடையை மீறி அஞ்சலி செலுத்த யாராவது வந்தால் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி குத்தாலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் மதகளிர் மாணிக்கம் கிராமத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையே, தமிழர் விடுதலை படை இயக்கத் தலைவர் தமிழரசனின் 28-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதகளிர் மாணிக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த அந்த கட்சியினர் முடிவு செய்தனர். இதற்காக, நேற்று காலையில் அந்த கட்சியின் மாநில தலைவர் புகழேந்தி தலைமையில் விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து தமிழரசன் உருவப் படத்துடன் ஊர்வலமாக புறப்பட தயாராகினர்.
இதையறிந்த விருத்தாசலம் போலீஸார் விரைந்து வந்து, ஊர்வலமாக செல்ல தடை விதித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் அங்கேயே ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டோரை விருத்தாசலம் போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT