Last Updated : 29 Jul, 2020 08:56 PM

 

Published : 29 Jul 2020 08:56 PM
Last Updated : 29 Jul 2020 08:56 PM

குமரி மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் 31-ம் தேதியுடன் நிறைவு: ஆயத்தமாகும் மீனவர்கள்

நாகர்கோவில்

கன்னியாகுமரி மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் 31-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

தமிழகத்தில் மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் ஜீன் 1-ம் தேதி தொடங்கி ஜீலை 31-ம் தேதி வரை இரு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் ஏற்கெனவே மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் மீன்பிடி தடைகாலம் கடந்த 15-ம் தேதியில் தொடங்கி இந்த ஜீன் மாதம் 31-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டது.

மீன்பிடி தடைகாலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு கடல் பகுதிகளுக்குட்பட்ட குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதைப்போல் கன்னியாகுமரியை அடுத்துள்ள மணக்குடியில் தொடங்கும் மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து நீரோடி வரையில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி பணியில் ஈடுபடவில்லை.

இப்பகுதியில் நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் மட்டுமே மீன்பிடித்தன. மீன்பிடி தடைகாலத்தின் விசைப்படகுகளை சீரமைப்பது, மற்றும் வலைகள், மீன்பிடி உபகரணங்களை சரிசெய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

மீன்பிடி தடைகாலம் மேற்கு கடல் பகுதியில் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் அன்று நள்ளிரவில் இருந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்கின்றனர். மீன்பிடி தடைகாலம் நீங்குவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

இதனால் குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் மீன்பிடி துறைமுகங்களில் மீனவர்கள் வலைகளை சீரமைத்து தயார்படுத்தி வருகின்றனர். மேலும் மீன்பிடி உபகரணங்களுடன் விசைப்படகுகள் தயார் நிலைய உள்ளன.

குமரி மேற்கு கடல் பகுதியில் விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்வதால், அவை ஒருவாரத்தில் கரைதிரும்பும் நேரத்தில் மீன்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் கரோனா ஊரடங்கு நேரத்தில் தங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x