Published : 26 Jul 2020 08:05 AM
Last Updated : 26 Jul 2020 08:05 AM

இ-பாஸ் விற்பனை புகாரில் 4 பேரிடம் போலீஸார் விசாரணை

இ-பாஸ் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களின்பேரில் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வந்த புகார்களின்பேரில் தமிழகம் முழுவதும் போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை விமான நிலைய பகுதிகளில் இ-பாஸ் வாங்கித் தருவதாகக் கூறிய நபர் உட்பட 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் போலீஸார் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் கட்டாயம் ரோந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x