Published : 18 Jul 2020 07:50 AM
Last Updated : 18 Jul 2020 07:50 AM
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையில் எம்எல்ஏவுக்கான ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ரூ.5 கோடியே 22 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து வருவதாக காரில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
காரில் வந்த மூவரும் தப்பிக்க முயன்றபோது போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். அந்த கார்எந்த எம்எல்ஏவுக்கு சொந்தமானது, இவ்வளவு பணம் யாருக்கு வந்தது என்பது தெரிய வேண்டும்.
இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் மக்களுக்கு தெரிய வேண்டும். முறைகேடு செய்பவர்கள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT