Published : 09 Jul 2020 07:03 AM
Last Updated : 09 Jul 2020 07:03 AM
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக மாணிக்லால் கர்மாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் மும்பையில் இருந்து பதவி உயர்வு பெற்று இங்கு வந்துள்ளார். 1985-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி அலுவலர்களின் தொகுப்பைச் சேர்ந்த இவர், வருமானவரித் துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். சென்னை முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக இருந்த அனு ஜே.சிங்கிடமிருந்து மாணிக்லால் பொறுப்புகளை பெற்றுக் கொண்டார்.
இத்தகவல், சென்னை வருமானவரி கூடுதல் ஆணையர் பி.திவாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT