Published : 08 Jul 2020 07:10 AM
Last Updated : 08 Jul 2020 07:10 AM

மத்திய குழு இன்று சென்னை வருகை

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் இன்று சென்னை வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து மத்திய குழுவினர் ஏற்கெனவே 2 முறை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கியதுடன், மத்திய அரசுக்கும் அறிக்கை அளித்தனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா, தொழில், உள் வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலர் ராஜேந்திர ரத்னு, ஜிப்மர் மருத்துவர்கள் ஸ்வரயூப் சபு, சதீஷ், ஐஏஎஸ் அதிகாரி சுபோத் யாதவா ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் மீண்டும் தமிழகம் வருகின்றனர். பெங்களூருவில் இருந்து இன்று சென்னை வரும் இக்குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். பிறகு, சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றுமுதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x