Published : 06 Jul 2020 07:14 AM
Last Updated : 06 Jul 2020 07:14 AM
முழுஊரடங்கு முடிந்த நிலையில் இன்று (ஜூன் 6) முதல் வளாக கல்லூரிகள் செயல்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலை. சார்பில், வளாக கல்லூரிகளைச் சேர்ந்த அனைத்துத் துறைகளின் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘சென்னையில் முழு ஊடரங்கு முடிவடைந்துவிட்டதால் வளாக கல்லூரிகள் இன்று (ஜூன் 6) முதல் வழக்கம்போல் செயல்படும். இத் தகவலை அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
பணியாளர்கள் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பயணத்தின்போது அவர்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதுடன், அலுவலகங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பணிபுரியவும் அறிவுறுத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT