Published : 04 Jul 2020 07:09 AM
Last Updated : 04 Jul 2020 07:09 AM

தி.மலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுவார்கள். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த 3 மாதங்களாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆனி மாதமும் கிரிவலம் செல்வதற்கும் தடை விதித்து ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,“ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 4 மற்றும் 5-ம் தேதி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x