Published : 02 Jul 2020 08:13 AM
Last Updated : 02 Jul 2020 08:13 AM

சிவகங்கையில் வேகமெடுத்த கரோனா: அடுத்தடுத்து 10 பேர் மரணம்

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் 10 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இதில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் 2 பேர் இறந்தனர். மற்ற 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓட்டுநர் மற்றும் காரைக்குடி, பரமக்குடி, பார்த்திபனூர், மதுரையைச் சேர்ந்த தலா ஒருவர் என 5 பேர் கரோனா தொற்றால் இறந்தனர். மேலும் இறந்தவர்களில் 2 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 3 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வெளி வரவில்லை. இதற்கிடையில் சிவகங்கை, பனையூர், திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த தலா 2 பேர், தேவகோட்டை, சருகணியைச் சேர்ந்த 13 பேர், காரைக்குடி, கோட்டையூர், புதுவயல் பகுதிகளைச் சேர்ந்த 13 பேர் என 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் திடீரென கரோனா தொற்று வேகமெடுத்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x