Published : 22 Sep 2015 09:11 AM
Last Updated : 22 Sep 2015 09:11 AM
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கை போர்க்குற்றத் துக்கு சர்வதேச விசாரணை தேவை என்று முதல்வர் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
இதற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களை முந்தைய காங்கிரஸ் அரசு அலட்சியம் செய்தது. அதனால், தமிழக மக்கள் அவர்களை தூக்கி எறிந்தனர். பாஜக அரசும் அதையே செய்தால், அவர்களையும் தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT