Published : 16 Jun 2020 07:40 AM
Last Updated : 16 Jun 2020 07:40 AM

பாஜக மாநில செயலாளர் உட்பட புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கரோனா: 15 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிக்கை

புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி ரத்தினம் நகரில் வசித்து வரும் பாஜக மாநில செயலாளருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி யுள்ளது.

இதையடுத்து அவர், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளார். இத்தகவலை சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். அவர் நடத்திவரும் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு பணியாற்றும் மேலும் 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து புதுச்சேரியில் பாஜக மாநில செயலர், 7 வயது சிறுமி உட்பட 9 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பிஆர்டிசி ஓட்டுநர் ஒருவர்.

இந்நிலையில், புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கை 15 நாட்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செயலாளர் ஜெகன்நாதன், திராவிடர் விடுதலை கழகம் தலைவர் லோகு அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர் செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், தமிழர் களம் அழகர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஸ்ரீதர், ராவணன், பகுத்தறிவு இயக்கம் அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் ராம்மூர்த்தி, இலக்கிய பொழில் இலக்கிய மன்றம் தலைவர் பராங்குசம், புதுச்சேரி தன்னுரிமை கழக தலைவர் சடகோபன், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம் ரகுபதி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் பாவாடைராயன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

காரைக்காலில்...

இதேபோல, சென்னை சென்று காரைக்கால் திரும்பிய தந்தை, மகன் ஆகியோருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x