Published : 18 Sep 2015 08:29 AM
Last Updated : 18 Sep 2015 08:29 AM
சட்டப்பேரவையில் பால் மானிய கோரிக்கையின்போது அரசு வெளியிட்ட அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலர் கே.முகமதுஅலி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவையில் பால் வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, பால் உற்பத்தியாளர்களின் பால் முழுவதையும் அரசு கொள்முதல் செய்வது, 50 சதவீத மானியத்தில் கால்நடைத் தீவனங்களை வழங்கு வது, குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலை சேர்த்து வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அதனால் அரசின் அறிவிப்புகள் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்புகள் இல்லை
தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘‘சட்டப்பேரவையில், ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் உயர்வு, பால் முகவர்களுக்கு தனி நலவாரியம், இலவச மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு, தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.
ஆவின் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. இந்த பால் மானியக் கோரிக்கை எங்களுக்கு மாற்றம் அளிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT