Published : 08 Jun 2020 06:59 AM
Last Updated : 08 Jun 2020 06:59 AM

பிஹாரில் கும்பலால் கொலையுண்ட ராணுவ வீரர் உடல் சொந்த ஊர் வருகை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை அடுத்த குருந்தன்கோடு வீரவிளையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). துணை ராணுவத்தின் 19-வது பட்டாலியன் வீரரான இவர், பிஹார் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 7-ல் இவர், அங்கு நாக்கா என்ற இடத்திலுள்ள சோதனைச்சாவடியில் பணியிலிருந்தபோது அவ்வழியாக மாடுகளை கடத்திச் சென்ற வாகனத்தை மறித்து சக வீரர்களுடன் சேர்ந்து சோதனை செய்தார்.

அப்போது, மாடு கடத்தும் கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் கடந்த 5-ம் தேதி இரவு உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான வீரவிளைக்குக் கொண்டு வரப்பட்டது. ராணுவ மரியாதையுடன் இன்று உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மணிகண்டனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x