Published : 08 Jun 2020 06:35 AM
Last Updated : 08 Jun 2020 06:35 AM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்

சென்னை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகனுக்கு கடந்த 2-ம் தேதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கெனவே கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்திருந்த ஜெ.அன்பழகனுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் உடல்நிலை மோசமடைந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலமாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், டாக்டர்களின் தீவிர சிகிச்சையால், அன்பழகனுக்கு தற்போது ஆக்சிஜன் தேவை 29 சதவீதமாக குறைந்திருப்பதாகவும், கல்லீரல் செயல்பாடு அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x